உள்ளூர் செய்திகள்

மூலிகை செடிகள் நடும் விழா

Published On 2022-11-02 07:18 GMT   |   Update On 2022-11-02 07:18 GMT
  • மூலிகை செடிகள் நடும் விழா நடைபெற்றது.
  • தோட்டக்கலை சார்பில் நடந்தது

கரூர்:

கரூர் மாவட்ட தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பில், அரசு கலைக் கல்லுாரி பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி வளாகத்தில், மூலிகை செடிகள் நடும் விழா நடந்தது. இதில், தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூலிகை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் பழவகை செடிகள் நடும் பணியை, பிற்படுத்தப்பட்டோர் நல வாரிய அலுவலர் சந்தியா தொடங்கி வைத்தார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் தமிழ்செல்வி, தோட்டக்கலை பயிர்களின் முக்கியத்துவம் பற்றி, மாணவியர் களிடம் விளக்கமளித்து பேசினார். விழாவில், கரூர் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர் செல்வகுமார், மாணவியர் விடுதி காப்பாளர் ஹேமா, உதவி தோட்டக்கலை அலுவலர் வீரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News