உள்ளூர் செய்திகள்

வாகன விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-10-20 06:18 GMT   |   Update On 2023-10-20 06:20 GMT
  • தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்
  • அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது
  • சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்


கரூர்


கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் விஜயன் (வயது 32) இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் விஜயன் பணி முடிந்து திருச்சியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் குளித்தலை வழியாக பழைய ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி -கரூர் புறவழிச்சாலை நாபாளையம் அருகே சென்ற போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட விஜயன் சம்பவ இடத் திலேயே தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News