உள்ளூர் செய்திகள்

கரூரில் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

Published On 2022-12-06 09:28 GMT   |   Update On 2022-12-06 09:28 GMT
  • ஜவுளி வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
  • அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்

கரூர்,

கரூர் திரு.வி.க., சாலையை சேர்ந்த ஜோதி லிங்கம் மகன் கார்த்தி (வயது34) இவர், கரூர் உழவர் சந்தை அருகே, ஜவுளி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை, ஜவுளி கடையில் இருந்த போது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள்இரண்டு பேர் , கார்த்தியை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட் டனர். அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News