- திருமணமான ஒரு மாதத்தில் காதல் கணவர் மாயமானார்
- மனைவி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை
தொட்டியம்,
கரூர் மாவட்டம் மண்மங்கலம் கருப்பம்பாளையம், அபி பாளையம், மூப்பத்தெருவை சேர்ந்த மணி மகன் கிருஷ்ணமூர்த்தி வயது (22) இவருக்கும் கரூரைச் சேர்ந்த கோபிகா வயது (19) என்பவருக்கும் கடந்த மாதம் ஆறாம் தேதி நண்பர்கள் முன்னிலையில் காதல் திருமணம் நடைபெற்றது சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜய் என்பவரும் வழக்கு சம்பந்தமாக தொட்டியம் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு வருவதாக கோபிகாவிடம் சொல்லிவிட்டு வந்தனர் பின்பு வீடு திரும்ப காலதாமதம் ஆனதால் கோபிகா கிருஷ்ணமூர்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நானும், அஜையும், தொட்டியம் நீதிமன்றத்தில் இருப்பதாக கூறியுள்ளார் பின்பு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் கோபிகா அஜய் செல்போனுக்கு தொடர்பு கொண்டு கேட்ட பொழுது நான் இருசக்கர வாகனத்தில் கரூருக்கு வந்து கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார் தனது கணவர் எங்கே? என்று கேட்டதற்கு கிருஷ்ணமூர்த்தி தொட்டியத்தில் இருந்து காரில் சென்று விட்டதாக அஜய் கூறியுள்ளார் திருமணமான ஒரு மாதத்தில் தனது கணவர் கிருஷ்ணமூர்த்தி தொட்டியம் நீதிமன்றத்திற்கு வந்து வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கோபிகா தொட்டியம் காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.