- கரூர் பெரிய ரெங்கம்பாளையத்தில் மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்
- கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
வேலாயுதம்பாளையம்,
கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே பெரிய ரெங்கம்பாளையம் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை நடைபெறுவதாக கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வேலாயு தம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரெங்கம்பா ளையம் பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி சாவித்திரி (வயது 50), பாலச்சந்திரன் (வயது 56) , மரவாபாளையம் பகுதியை சேர்ந்த மணி (வயது 63), தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 45) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 120 மதுப்பாட்டுகளை பறிமுதல் செய்து, அவர்கள் மீது வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.