உள்ளூர் செய்திகள்
- கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- ரோந்து பணியின் போது போலீசார் குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.
கரூர் :
கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., அப் துல்லா, வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் செங்குந்தபுரம், பஞ்ச மாதேவி, சுங்ககேட் பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, தமிழக அரசால் தடை செயப் பட்டுள்ள புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக இந்திராணி, (வயது48), ராஜா (32), காந்திமதி(61), ஆகிய மூன்று பேரை, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.