உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற 15 பேர் கைது

Published On 2023-10-03 14:02 IST   |   Update On 2023-10-03 14:02:00 IST
  • கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்ற 15 பேர் கைது செய்யப்பட்டனர்
  • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பானங்களை பறிமுதல் செய்யப்பட்டன

கரூர், 

கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஷியா சுரேஷ் உள்ளிட்ட, போலீசார் தோகமலை, கரூர் டவுன், வெங்க மேடு, க.பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக காமராஜ் (வயது 60), குமார் (43), பாலமணி (70), ஆறுமுகம் (35), சேட்டுல (40), பாப்பாத்தி (65), தேவதாஸ் (55), ஆறுமுகம் (52), கண்ணன் (59), வெற்றி வேல் (45) ஆகிய, 10 பேரை, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர்.மேலும் பல்வேறு பகுதிகளில் முறைகேடாக மது விற்றதாக கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கள்ளை ஊராட்சி கள்ளை ராஜலிங்கம் (வயது 77), புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் சாத்தான்குடி வினோத் (30), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வெள்ளைய கவுண்டனூர் பகுதியை சேர்ந்த ராஜ்கணேஷ் (29), புதுக் கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவில் பொன் பேத்தி பகுதி மதன்குமார் (27), போத்துராவுத்தன் பட்டி ஊராட்சி போத்து ராவுத்தன்பட்டி மகன் குமார் (43) ஆகியோரை தோகைமலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மது பானங்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

Similar News