உள்ளூர் செய்திகள்
தோகைமலை அருகே சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ம் ஆண்டு விழா
- தோகைமலை அருகே சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியின் 14ம் ஆண்டு விழா நடைபெற்றது
- கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ்கண்ணா கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்
கரூர்:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை சீத்தப்பட்டியில் இந்திய ஜனநாயக கட்சியினுடைய 14ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இந்திய ஜனநாயக கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா கட்சியின் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில் மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை, இளைஞர் அணி செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிக்குமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.