ரூ.1.2 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டபணிகள்
- ரூ.1.2 கோடி மதிப்பில் வளர்ச்சித் திட்டபணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
- க.பரமத்தி ஊராட்சி, ஒன்றியம் குப்பம் ஊராட்சியில்
கரூர்:
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், குப்பம் ஊராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அரவக்குறிச்சி எம். எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டிபட்டியில் ரூ.3.71 லட்சம் மதிப்பீட்டில் பைப்லைன் விஸ்தரிப்பு செய்து தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல், இதே போல் ஆண்டி சங்கிலிபாளையம், அரசம்பாளையம், அய்யம்பாளையம், காளிபாளையம், காங்கயம்பாளையம், நடுப்பாளையம், பஞ் சயங்குட்டை, குப்பம் ஊராட்சி குப்பம், சக்கரா பாளையம், சாலிபாளையம், சாலிபாளையம் ஏ.டி காலனி, சங்கரன் பாளையம் நொச்சி காட்டூர், தலை தலை ஈத்துப்பட்டி, வேலாயுதம்பாளையம், காட்டுவலசு உள்ளிட்ட பகுதிகளில் ரூபாய் ஒரு கோடியே 2 லட்சத்து 74 ஆயிரத்து மதிப்பீட்டில் பைப் லைன் விஸ்தரிப்பு செய்து தனிநபர் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் அரவக்குறிச்சி எம். எல்.ஏ. மொஞ்சனூர் இளங்கோ பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.