உள்ளூர் செய்திகள்
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி வங்கி கடன்
- கரூர் மாவட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில்ம களிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டது
- கலெக்டர் பிரபு சங்கர் வழங்கினார்
கரூர்,
கரூர் மாவட்டத்தில் இந்தியன் வங்கி சார்பில் வளர்பிறை, அப்பாஸ், அல்லி, ரோஜா, ரோஜா, சர்க்கரை பாவா, அன்னை இந்திரா, ஆலீப் , துளசி, ஜாம்யாலம், ரோஜா, ஹாஸ்லீன், ஹக் ஆகிய பள்ளப்பட்டியை சேர்ந்த 13 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வங்கி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார். இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராசா, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சைபுதீன், கரூர் மாவட்ட இந்தியன் வங்கி ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார். பள்ளப்பட்டி இந்தியன் வங்கி மேலாளர் வாலண்டினா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.