உள்ளூர் செய்திகள்

நவராத்திரி கொலு விழா

Published On 2023-10-26 14:20 IST   |   Update On 2023-10-26 14:20:00 IST
நவராத்திரி கொலு விழா

கரூர்,  

கருர் ஸ்ரீ சாராதா நிகேதன் மகளிர் கல்லூரி யில் கொலு விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு புராண இதிகாச கருத்தை விளக்கும் வகையில் கொலு பொம்மைகள் வைக்கப்படும் அதே போல் இந்த வருடம் மகாபாரதத்தை உட்கருவாக கொண்டு அமைக்கப்பட்டது. கொலுவில் மஹாபாரதம் நிகழ்வுகள், மஹாபாரத்தில் உள்ள அறிவியல், போர் வியூகம், போரில் பயன்படுத்தப்பட்ட அக்ரோணிகளின் எண்ணிக்கை மேலும் பகவத்கீதையின் கருத்து க்கள் போன்றவை கொலு வில் இடம் பெற்றன.

சைவ, வைணவ, தெய்வீ கக் கதைகளை மையமாக கொண்ட கொலு பொம்மை கள் ஒன்பது படிகளில் வைக்கப்பட்டது.

வியாசர் சொல்ல விநாயகர் உருவம் மகாபாரதத்தை எழுதுவ தைப் போல ரங்கோலியில் வரையப்பட்டது.

மேலும் 17 சக்தி பூஜை நடந்தது. அதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை விவேகானந்தா கல்லூரி முன்னாள் முதல்வர் சுப்பிர மணியம் இப்பூஜையில் கலந்து கொண்டு மஹா பாரத்தில் திரௌபதியின் தைரியத்தையும் எடுத்து கூறினார்.

கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கண்டு மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News