உள்ளூர் செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Published On 2023-11-24 10:01 GMT   |   Update On 2023-11-24 10:01 GMT
  • நாளை முதல் 27-ந் தேதி வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
  • இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

தஞ்சாவூர்:

அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை அண்ணா மலையார் தகோயில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 26-ந் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.

இதேபோல் 27-ந் தேதி பவுர்ணமி கிரிவலம் நடைபெற உள்ளது.

இந்த விழாக்களை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக நாளை முதல் (சனிக்கிழமை) 27-ந் தேதி (திங்கட்கிழமை) வரை கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பி வருவதற்கு வசதியாக மினிபஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, பயணிகள் மற்றும் பக்தர்கள் www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News