விஷம் குடித்து தற்கொைல செய்து கொண்ட உமேஷை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல்லில் விஷம் குடித்து கர்நாடகா வாலிபர் தற்கொலை: காதலிக்கு தீவிர சிகிச்சை
- காவிரி ஆற்றின் கரையோரப்–பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.
- டாக்டர்கள் உமேஷ் ஏற்கனவே உயிரி–ழந்து விட்டதாக தெரிவித் தனர்.
பென்னாகரம்,
கர்நாடகா மாநிலம் ராம்நகரா மாவட்டம் கனக–புரம் அருகே கோடிஅள்ளி கிராமத்தில் உள்ள சாமுண்டிபுரா பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோடிஅள்ளியில் உள்ள ஒரு அரசுபள்ளியில் பி.யு.சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த உமேஷ் (24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் உமேஷ் தனது காதலியுடன் சுற்றுலாவுக்காக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளார். அவர்கள் இன்று காலை அங்குள்ள காவிரி ஆற்றின் கரையோரப்–பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதனை அங்கிருந்த பரிசல் ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்த–னர். உடனே அவர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மயங்கி கிடந்த காதல் ஜோடி இருவரையும் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்–பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் உமேஷ் ஏற்கனவே உயிரி–ழந்து விட்டதாக தெரிவித் தனர். உமேஷூடன் வந்த சிறுமிக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து இறந்த உமேஷின் உடலை போலீ–சார் மீட்டு பிரேத பரிசோ–தனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையில் உள்ள முகவரியில் சிறுமி யின் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்ப–வத்தை பற்றி போலீசார் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சிறுமி மற்றும் உமேஷின் பெற்றோர்கள் தருமபுரிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பே தனது காதலுனுடன் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கலாம் என்றும், இதனால் சிறுமி மாயமா–னதால், கோடிஅள்ளி போலீஸ் நிலையத்தில் தனது பெண் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்ததும் தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒகேனக்கல் சுற்றுலா பகுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.