உள்ளூர் செய்திகள்

பாரதியஜனதா சார்பில் சாலையை சீரமைக்க கேட்டு நாற்று நடும் போராட்டம்

Published On 2023-11-10 07:54 GMT   |   Update On 2023-11-10 07:54 GMT
  • ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  • மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.

அருமனை:

மஞ்சாலுமூடு கைதகம் தெற்றிவிளை பகுதியில் மழை காரணமாக சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க கோரி பா.ஜ.க. சார்பில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மேல்புறம் வடக்கு ஒன்றிய தலைவர் சதீஷ் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுடர் சிங், பொதுச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் நந்தினி, ஒன்றிய பொதுச் செயலாளர் வின்சென்ட், மற்றும் ஆனந்த், முழுக்கோடு கட்சித் தலைவர் அனில் குமார் மஞ்சாலுமூடு தலைவர் வினு, அருமனை கவுன்சிலர் விஜயகுமார், ராமச்சந்திரன் மற்றும் சுஜி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ஹரிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News