உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் 2 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை

Published On 2023-10-20 07:42 GMT   |   Update On 2023-10-20 07:42 GMT
  • பகவதி அம்மன் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது
  • போர்க்கால அடிப்படையில் தண்ணீர் வெளியேற்றம்

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக பகல் மற்றும் இரவு வேளைகளில் தொடர்ந்து இடையிடையே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் வானம் மழை மேகத்துடன் மப்பும் மந்தாரமாக காட்சியளித்தது. பின்னர் மதியம் 12.30 மணியில் இருந்து "திடீர்"என்று இடி-மின்ன லுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை பிற்பகல் 2.30 மணி வரை 2 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. அதன்பிறகு மாலை வரை விட்டு விட்டு சாரல் போன்று மழை பெய்து கொண்டே இருந்தது. இடையிடையே பயங்கர இடி முழக்கமும், கண்ணை பறிக்கும் வகையில் "பளிச், பளிச்"என்று மின்னலும் ஏற்பட்டது. இந்த கனமழையினால் தெருக்களில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள மழைநீர் வடிகால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் மழை வெள்ளம் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலுக்குள் புகுந்தது. இதனால் கோவில் வளாகம் முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதைத்தொடர்ந்து கோவில் மேலாளர் ஆனந்த் மேற்கொண்ட அதிரடி நட வடிக்கையின் காரணமாக திருக்கோவில் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் கோவிலுக்குள் தேங்கி நின்ற மழையின் நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரத் துக்குள் அந்த மழை வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணிக்கு வழக்கம்போல் கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்து விட்டு வந்தனர். தொடர்ந்து பெய்த இந்த கனமழையினால் கன்னியா குமரிக்கு சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க முடியாமல் லாட்ஜில் உள்ள அறைகளி லேயே முடங்கி கிடந்தனர். இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தது.

Tags:    

Similar News