உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலுக்கு சரக்கு ரயிலில் கொண்டு வரப்பட்ட 3600 டன் ரேசன் அரிசி

Published On 2023-06-21 08:00 GMT   |   Update On 2023-06-21 08:00 GMT
  • ஆந்திராவிலிருந்து நாகர்கோவில் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
  • ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி:

குமரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயில் மூலமாக கொண்டு வரப்படுகிறது. பின்னர் கிட்டங்கிக்கு அனுப்பி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆந்திராவிலிருந்து 58 வேகன்களில் 3600 டன் ரேஷன் அரிசி, சரக்கு ரயில் மூலமாக இன்று நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ரேஷன் அரிசியை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேஷன் அரிசியை ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News