வடசேரி பஸ் நிலையத்தில் பெண்கள் சரமாரி தாக்குதல்
- பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர்.
- இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில் :
குலசேகரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அழகு கலை பயிற்சி முடித்த அவர் தற்போது நாகர்கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே பகுதியில் அழகு கலை பயிற்சி பெற்ற மற்றொரு பெண்ணும் வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் வந்தனர். அப்போது இருவருக்கும் பஸ்சில் வைத்து தகராறு ஏற்பட்டது.
அதோடு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்ததும் இருவரும் சரமாரியாக மாறி மாறி தாக்கி கொண்டனர். ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கியதுடன் கடித்தும் கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் இருவரையும் சமாதானம் செய்தனர். இந்த பிரச்சினை தொடர்பாக இருவரும் வடசேரி போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பஸ் நிலையத்தில் இரு பெண்கள் சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.