உள்ளூர் செய்திகள்

நபார்டு வங்கி மூலம் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2023-11-26 07:19 GMT   |   Update On 2023-11-26 07:19 GMT
  • அமைச்சர் மனோதங்கராஜ் வழங்கினார்
  • மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண்டும்.

திருவட்டார் :

குலசேகரம் அரசு மூடு மனுவேல் திருமண மண்ட பத்தில் நபார்டு வங்கி மூலம் பழங்குடியினர் மேம்பாடு திட்டத்தின் கீழ் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நபார்டு பொது மேலாளர் சங்கர் நாராயணன் முன்னி லை வகித்தார்.

குமரி மாவட்ட நபார்டு உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம் வர வேற்றார். சிறப்பு விருந்தின ராக அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி னார். பழங்குடி மக்கள் வைத்திருந்த கண் காட்சி யையும் அவர் பார்வை யிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது :-

குமரி மாவட்டத்தை சார்ந்த பட்டியலின மக்கள் பிற சமூக மக்களுடன் சேர்ந்து எவ்வித வேறுபாடு மின்றி சுமூகமாக வாழக் கூடிய சூழல் நமது மாவட்டத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மனித நேயம். இந்த உணர்வில் நம்மை சுற்றி யுள்ள ஏழை-எளிய மக்க ளும் வாழ்வில் முன்னேற்றம் அடையும் வகையில் நாம் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.

மாவட்டத்தில் குழந்தை கள் அனைவரையும் நன்கு கல்வி கற்க வைக்க வேண் டும். நமது மாவட்டத்தில் உள்ள மீன்பிடி தொழில் செய்யும் மக்களும் கல்வியில் சிறந்து விளங்கிறார்கள்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்விக்காக பல்வேறு நலத்திட்ட உதவி களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதனை பயன்படுத்தி குழந்தைகள் அனைவரும் நன்கு கல்வி கற்க வேண்டும். மேற்படிப்பு படிக்கும் மாணவிகள், புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்து பயன்பற வேண் டும்.

இவ்வாறு அவர் பேசி னார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளைய ராஜா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவ லர் கனகராஜ், திருவட்டார் தாசில்தார் முருகன், மாவட்ட அரசு வக்கீல் ஜான்சன், குலசேகரம் பேரூ ராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட், தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், குலசேகரம் தி.மு.க. பேரூர் செயலாளர் ஜெபித்ஜாஸ் மற்றும் பலர் கலந்து கொண் டனர்.

Tags:    

Similar News