உள்ளூர் செய்திகள்

வின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

Published On 2023-10-18 07:38 GMT   |   Update On 2023-10-18 07:38 GMT
  • இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.
  • ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் சுங்கான் கடை அருகே அமைந்துள்ள வின்ஸ் சி.பி.எஸ்.இ பள்ளியில் பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.

மாணவர்கள் பெற்றோ ரின் உதவியுடன் தயாரித்துக் கொண்டு வந்த தானிய வகைகளில் செய்த உணவு வகைகளான கம்புஇட்லி, நவதானிய சுண்டல், பச்சைப்பயிறு உருண்டை, சாமைபிரியாணி, வெண் பொங்கல், சத்துமாவு உருண்டை கேழ்வரகு அல்வாலட்டு, எள்ளு ருண்டை, கடலை உருண்டை, கேழ்வரகுகளி, முருங்கைக்கீரை, இட்லி, அதிரசம், அச்சுமுறுக்கு, மோதகம் என பலவகை உணவுகள் காட்சிப்ப டுத்தபட்டன.

விழாவில் பாரம்பரிய உணவு வகைகள் எவை? அவற்றை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆசிரியைகள் சுனிமேரி மற்றும் மைக்கேல் ராணி ஆகியோர் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

உணவுத் திருவிழாவினை பள்ளி நிறுவனர் நாஞ்சில் வின்சென்ட் அறிவுரைப்படி செயலாளர் டாக்டர் கிளாரிசா வின்சென்ட், முதல்வர் டாக்டர் பீட்டர் அந்தோணி சுரேஷ், ஆரம்பநிலை ஒருங்கிணைப்பாளர் மெர்லின் சோனியா, ஆசிரியைகள் ஸ்வீட்லின், ஷைனி, சுதா, வினிதா, டயானா ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News