உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்த விஷபாம்பு

Published On 2022-07-15 13:57 IST   |   Update On 2022-07-15 13:57:00 IST
  • வனத்துறையினர் மீட்டுகாட்டில் விட்டனர்
  • விஷ பாம்பை காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலத்தில் நேற்று கொம்பேறி மூக்கன் என்ற கொடிய விஷ பாம்பு புகுந்தது. உடனே இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் உத்தரவுபடி பிரிவு வனவர் தலைமையில் வனக்காப்பாளர் அசோக் வனக்காவலர் ஜோயல் வேட்டை தடுப்புகாவலர் பிரவின் ஆகியோர் இணைந்து விஷ பாம்பை லாவகமாக பிடித்தனர்.

பின்னர் காட்டுப்பகுதியில பத்திரமாக கொண்டு விட்டனர்.

Tags:    

Similar News