உள்ளூர் செய்திகள்

கருங்கல் அருகே வேன் உரிமையாளர் தற்கொலை

Published On 2022-08-31 09:15 GMT   |   Update On 2022-08-31 09:15 GMT
  • கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றினர்
  • வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கருங்கல் அருகே உள்ள இலவுவிளை காரான் விளையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மகன் அஸ்வின் (வயது 30). இவர் சொந்தமாக கார், மேக்சி கேப் வேன்கள் வைத்து ஓட்டி வந்தார்.

பைனான்ஸ் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அஸ்வின் நேற்று பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனக்கு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட அஸ்வினுக்கு பிரீஷா என்ற மனைவியும், ரெஷ்வினா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

Tags:    

Similar News