உள்ளூர் செய்திகள்

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 2,065 பள்ளி மாணவர்களை கல்லூரி களப்பயணம் அழைத்துச் செல்ல திட்டம்

Published On 2023-10-19 12:30 IST   |   Update On 2023-10-19 12:30:00 IST
  • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
  • ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர்.

நாகர்கோவில் :

நான் முதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவ லக சிறு கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத் துக்கு மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

நான் முதல்வன் திட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் குமரி மாவட்டத் தில் உள்ள 59 அரசு மேல்நிலைப்பள்ளி ணகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் ஒரு பள்ளிக்கு 10 மாணவர்கள் வீதம் 590 மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு களப்பயணமாக அழைத்துச் செல்லப்பட் னர். பெற்றோரை இழந்த மாணவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்கள், நீண்ட நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் போன்றோர் கள் அழைத்து செல்லப்பட்ட னர்.

இந்த கல்வி ஆண்டில் (2023-2024) நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 59 அரசு மேல்நிலைப்பள்ளி களி லிருந்து குறைந்தபட்சம் பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் மொத்தம் 2,065 மாணவர்கள் வருகிற நவம்பர் மாதம் 6-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளுக்கு களப்பயண மாக அழைத்து செல்ல திட்டமிடப்பட் டுள்ளது. மாணவர்கள் கல்லூரி களுக்கு வரும்போது அவர்களை பேராசிரி யர்கள், நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள் வரவேற்று கல்லூரியில் உள்ள அனைத்து உட்கட்ட மைப்பு வசதிகள், நூலகம், ஆய்வகம், விளையாட்டு மைதானம் போன்றவற்றை காண்பித்து மாணவர்க ளுக்கு ஆர்வமூட்டி அவர்களை கல்லூரியில் சேர தூண்ட வேண்டும்.

70 மாணவர்களுக்கு 1 பஸ் வீதம் அரசு பஸ்கள் வசதி செய்யப்படும்.

கூடுதல் பஸ்கள் தேவைப்படின் களப்ப யணம் மேற்கொள்ளப்படும் கல்லூரிகள், கல்லூரி பஸ் வசதி செய்யவும், அதற்கான செலவினம், மாணவர்க ளுக்கான உணவு வசதி போன்றவை ஒருங்கிணைந்த பள்ளி கல்வியிலிருந்து மேற்கொள்ளவும் தெரி விக்கப்பட்டுள்ளது. தனி யார் கல்லூரிகளையும் தேர்வு செய்ய ஆலோ சிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News