உள்ளூர் செய்திகள்

நாய் குறைத்ததில் தகராறு கார் கண்ணாடியை உடைத்து, வீட்டை சூறையாடிய கும்பல்

Published On 2023-07-09 06:47 GMT   |   Update On 2023-07-09 06:47 GMT
  • 4 பேர் மீது வழக்குப்பதிவு
  • சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

நாகர்கோவில் :

தென்தாமரைகுளம் அருகே கோவில் விளையை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி சஜிதா (வயது 32). இவர்கள் சம்ப வத்தன்று வீட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 வாலிபர்கள் அந்த வழியாக சென்றனர். அவர்க ளை பார்த்து ராஜலிங்கத்தின் வீட்டில் உள்ள நாய் குறைத்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர்கள் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டனர். இருவரையும் அவதூறாக பேசியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து கணவன்- மனைவி இருவரும் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் உள்ள கேட்டை பூட்டி விட்டு வீட்டிற்குள் சென்றனர். அதன் பிறகு அந்த வாலிபர்கள் வீட்டின் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து சென்று அவதூறாக பேசியதுடன் வீட்டின் முன்பு நின்ற காரின் கண்ணாடியையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

மேலும் வீட்டிலிருந்த வெளியே இருந்த பொருட்களையும் சூறையாடினர். பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் சுஜிதா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்த சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை யும் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் வீட்டை சூறையாடுவது போன்ற காட்சிகளும் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவியிடம் அந்த கும்பல் தகராறில் ஈடுபடுவது போன்ற காட்சி களும் இடம் பெற்றிருந்தது. அதன் அடிப்படையில் போலீ சார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொட ர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது அந்த வாலிபர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நட வடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

தற்பொழுது ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவி சஜிதாவிடம் தகராறில் ஈடுபட்ட சி.சி.டி.வி. வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீட்டில் இருந்த நாய் குரைத்ததற்காக வீட்டை சூறையாடியதுடன் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் தென்தாமரைகுளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News