உள்ளூர் செய்திகள்

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தீபாவளி வாழ்த்து

Published On 2022-10-23 09:19 GMT   |   Update On 2022-10-23 09:19 GMT
  • அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும்.
  • புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.

நாகர்கோவில்:

தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மகத்தான நன்நாள் தீபாவளி திருநாள்.தர்மத்தை காக்க, அதர்மத்தை அழிக்க இறைவன் மகா விஷ்ணு தோன்றி நரகாசுரன் என்னும் அரக்கனை அழித்த திருநாளே தீபாவளி திருநாளாகும். இத்திருநாள் ஒளி மயமான எதிர்காலத்தை நமக்கு வழங்கட்டும். அனைவர் வாழ்விலும் அனைத்து செல்வங்களும் பெற்று, வளமான வாழ்வு கிடைக்கட்டும். அ.தி.மு.க. 51-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மகிழ்ச்சிகரமான இவ்வாண்டில் காணுகின்ற தீபாவளி திருநாளை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News