உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே செம்மண் கடத்திய டெம்போ - ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல்

Published On 2022-10-12 07:55 GMT   |   Update On 2022-10-12 07:55 GMT
  • போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

களியக்காவிளை அருகே அனுமதி இல்லாமல் செம்மண் எடுத்து கடத்த ப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் களியக்கா விளை போலீசார் இன்று அதிகாலை மலையடி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை சந்தேகத்தின் பேரில் நிறுத்தினர்.

போலீசாரை கண்டதும் டெம்போவை சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், டெம்போவை சோதனை செய்தபோது அதில் செம்மண் இருந்தது கண்டு பிடிக்கபட்டது. அதனை அனுமதி இல்லாமல் கடத்துவதும் தெரியவந்தது.

இதைதொடர்ந்து செம்மண்ணுடன் டெம்போவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்து செம்மண் அள்ளுவதற்க்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் கைப்பற்றி னர்.

தப்பி ஓடிய டெம்போ டிரைவர் மற்றும் ஜே.சி.பி. எந்திரத்தின் உரிமையாளர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News