உள்ளூர் செய்திகள்

ஆய்வு பணிகளை இயக்குனர் பிருந்தாதேவி ஆய்வு செய்தபோது எடுத்த படம் 

பேச்சிப்பாறையில் தோட்டக்கலைத்துறை இயக்குனர் ஆய்வு

Published On 2022-11-19 07:54 GMT   |   Update On 2022-11-19 07:54 GMT
  • தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
  • பண்ணை பராமரிப்பு குறித்த அறிவுரைகளை வழங்கினார்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் அரசு தோட்டக்கலை பண்ணை பேச்சிப்பாறை யில் தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குனர் டாக்டர். பிருந்தா தேவி தோட்டக்கலை பண்ணை பணிகளை ஆய்வு மேற்கொண்டு பண்ணை பராமரிப்பு குறித்த அறிவு ரைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் டாக்டர். பிருந்தாதேவி கூறியதாவது:-

பண்ணை பகுதிகளில் நெகிழி குப்பைகள் இல்லா வண்ணம் அனைவரும் பராமரிக்க வேண்டும். பண்ணையில் தாய் செடிகள் மற்றும் மரக்கன்றுகளை நட்டு தினமும் பராமரிக்க வேண்டும். இலவங்க பட்டை மரங்களை பராமரிக்க முன்னுரிமை கொடுத்து அதன் உற்பத்தியை பெருக்க வேண்டும். தேன் பதப்படுத்தும் அலகி னை பண்ணையிலும் விவசாயிகளும் தொடர்ந்து பயன்படுத்தி பயனடைய வேண்டும் என்றும் தெரி வித்தார்.

இந்த ஆய்வில் டான்ஹோடா செயற்பொறியாளர் பாலாஜி, தோட்டக்கலை துணை இயக்குநர் ஷீலா ஜாண், தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) மு.வ சரண்யா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை உதவி இயக்குநர் திலீப், அருண்குமார், நந்தினி மற்றும் தோட்டக்கலை துறை, அலுவலர்கள் பணி யாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News