ஜோதிலிங்கேஸ்வரருக்கு வாசனைத்திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்
- கன்னியாகுமரி அருகே உள்ள மருந்துவாழ்மலையில் நடந்தது
- பக்தர்களுக்கு 7 வகையான பிரசாதம் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி அருகே உள்ளகொட்டாரம் பொற்றையடி வைகுண்டப தியில்1800அடி உயரம ருந்து வாழ்மலை அமைந்து உள்ளது.
இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஆவணிமாத பிரதோஷம் நடைபெற்றது.
இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாப்பொடி, திருமஞ்சனப் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், நாட்டுசர்க்க ரை, இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம், உள்பட16வகையான வாசனைத் திரவியங்களால் இந்த அபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த அபிஷேகத்தை சிவாச்சாரியார் பிரபாகரன்அடிகளார் நடத்தினார். பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனைநடந்தது.இதையொட்டி சிவனடியார்கள் மற்றும் பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் போன்ற 7 வகையான அருட் பிரசாதங்கள் வழங்கப்பட்டன