உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் இதுவரை தீர்க்கப்படாத 10 பிரச்சினைகளுக்கு தீர்வு - அதிகாரிகளுடன் கலெக்டர் அரவிந்த் ஆலோசனை

Published On 2022-11-05 14:26 IST   |   Update On 2022-11-05 14:26:00 IST
  • புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்
  • சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

நாகர்கோவில்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தீர்க்கப்படாத 10 பிரச்சனைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் உட்பட துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் நீண்டகாலம் தீர்க்கப்படாத 10 பிரச்சினைகள் தொடர்பாக முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

புத்தளம் பேரூராட்சி கீழ புத்தளம் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் பைப்லைன் அமைத்து மக்களுக்கு குடிநீர் வசதி செய்திட வேண்டும்.தெரிசனம்கோப்பு பழையாற்றில் உறைகிணறு அமைத்து காட்டுப்புதூர் ஊராட்சி வரை பைப்லைன் நீட்டிப்பு செய்து கடுக்கரை, திடல், காட்டுப்புதூர் ஊராட்சிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். கேசவன்புத்தன்துறை ஊராட்சி புத்தன் துறை பாலன் ஏசு நடுநிலைப்பள்ளியில் பின்புறம் முதல் பொழிமுகம் வரை மழை நீர் ஓடை அமைக்க வேண்டும்.

ஆரல்வாய்மொழி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட வேண்டும். சாமிதோப்பு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சமத்துவ சுடுகாடு வழி செல்லும் சாலை பலப்படுத்தி மேம்பாடு செய்ய வேண்டும்.

பள்ளந்துறை முதல் மணக்குடி ரோடு சீர் செய்தல் வேண்டும், தெள்ளாந்தி ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணடி கிராமத்திற்கு செல்லும் நாஞ்சில் நாடு புத்தனார் கால்வாய் பழுதடைந்துள்ளது உபரி நீர் வழிந்தோடியை சரி செய்து அதன் மேற்பகுதியில் புதிய பாலம் மற்றும் தார் சாலை அமைக்க வேண்டும்.

சுசீந்திரம் கவிமணி நகர் பகுதியில் பழையாற்றில் தடுப்புசுவர் அமைத்து சிறு பாலங்கள் அமைக்க வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Tags:    

Similar News