உள்ளூர் செய்திகள்

திருவட்டாரில் பக்தர்கள் திரட்டிய நிதியில் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு வெள்ளி கமல வாகனம்

Published On 2022-06-18 09:55 GMT   |   Update On 2022-06-18 09:55 GMT
  • இன்றும், நாளையும் சுகிர்த ஹோமம் நடக்கிறது
  • திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெறுகிறது

கன்னியாகுமரி:

திருவட்டார் ஆதிகே சவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் ஜூலை 6-ந்தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் பக்தர்கள் திரட்டிய நிதி ரூ.15 லட்சம் செலவில் புதியதாக வெள்ளியிலான கமலவாகனம் மற்றும் அனந்த வாகனம் ஆகியன நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் உள்ள சிற்ப ரத்னா கலைக்கூடத்தில் உரு வாக்கும் பணி கடந்த 6 மாத காலமாக நடந்து வந்தது.

வாகனம் அமைக்கும் பணி முடிவடைந்து நேற்று காலை சிற்பி செல்வராஜ் தலைமையில் சிறப்பு பூஜைக்குப் பின்னர் மினி லாரியில் ஏற்றி திருவட்டார் தளியல் கருடாள்வார் சன்ன திக்கு கமல வாகனங்கள் கொண்டு வரப்பட்டது.

பின்னர் மாலையில் சிறப்பு தீபாராதனை யைத்தொடர்ந்து மேள தாளம் முழங்க பக்தர்கள் புடை சூழ, நாம ஜெபத்துடன் ஊர்வலகமாக திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுக்கு வாகனங்களை கொண்டு வந்தனர். அங்கு கோவிலை வலம் வந்த பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபம் முன்புள்ள மண்டபத்தில் இரு கமல வாகனங்களும் கோவில் மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவிலில் பல்வேறு பரிகார பூஜைகள்நடந்து வந்த நிலையில் இன்றும், நாளையும் காலை முதல் மதியம் வரை சுகிர்த ஹோமம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News