உள்ளூர் செய்திகள்

தக்கலை கோர்ட்டில் நடந்த லோக் அதாலத்தில் 215 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.2½ கோடி வசூல்

Published On 2023-09-11 07:03 GMT   |   Update On 2023-09-11 07:03 GMT
  • 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
  • லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.

தக்கலை :

தமிழகம் முழுவதும் லோக் அதாலத் நடைபெற்றது. இதில் தக்கலை கோர்ட்டில் 374 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 215 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் வங்கி வாரா கடன் வழக்கு 229-ல் 89 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது. இதுபோல சிவில் வழக்குகள் 49 எடுத்துக்கொள்ளப்பட்டு 31 வழக்குகள் முடிக்கப்பட்டு பணம் வசூலிக்கப்பட்டது.

மேலும் குற்றவியல் வழக்குகளில் 96 எடுக்கப்பட்டு 95 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. லோக் அதாலத் மூலம் ரூ.2½ கோடி வசூலாகி உள்ளது.

இதில் பத்மனாபபுரம் சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் தலைமையில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மருதுபாண்டி, நீதிபதி பிரவீன் ஜீவா மற்றும் வழக்கறிஞர் ஜாண் இக்னேசியஸ் உள்பட பல வக்கீல்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News