உள்ளூர் செய்திகள்

குலசேகரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட குவாரிக்கு சீல் வைப்பு

Published On 2022-09-14 07:46 GMT   |   Update On 2022-09-14 07:46 GMT
  • டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது
  • 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

கன்னியாகுமரி:

குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.

இதுபற்றி திருவட்டார் தாசில்தார் தினேஷ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது குவாரி எந்தவித அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.

மேலும் அந்த குவாரியை வேர்கிளம்பி காப்புவிளை பகுதியை சேர்ந்த சுபிஷ் (வயது 40) மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேர் சேர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்தது.

உரிய அனுமதி இல்லாமல் குவாரி நடத்தப்பட்டதால் அதனை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு கல் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News