உள்ளூர் செய்திகள்

பாலூர் அருகே வீட்டு குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகளால் சாலை சேதம்

Published On 2023-11-05 08:44 GMT   |   Update On 2023-11-05 08:44 GMT
  • சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  • 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன

கருங்கல் :

பாலூர் அருகே பரவ விளை முதல் கல்லடை செல்லும் இணைப்பு சாலை சுமார் 10 வருடங்கள் முன்பு போடப்பட்டது. இந்த சாலையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். சுமார் 500 மீட்டர் நீளமுள்ள இச்சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் இச்சாலையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாலூர் ஊராட்சி சார்பில் மேற் கண்ட சாலையின் நடுப் பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்குவ தற்காக குழி தோண்டி குழாய்கள் பதித்துள்ளனர். இதனால் சாலை முழு வதுமாக சேதம டைந்துள் ளது.

சாலை முழுவதும் சகதி நிறைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் இந்த பகுதியை ஆய்வு செய்து ரோட்டோ ரமாக குடிநீர் குழாயை அமைப்பதோடு, சாலையை சீரமைத்து தார்போட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News