உள்ளூர் செய்திகள்
குலசேகரத்தில் ஆர்.எஸ்.எஸ். பெண்கள் அமைப்பு பேரணிக்கு தடை
- நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்தது
- செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக திட்டமிடப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தப்படாமல் உள்ள நிலையில், ராஷ்ட்ர சேவிகா சமிதி-மகளிர் அமைப்பு சார்பில் வழக்க மாக நடைபெறுகின்ற அணிவகுப்பு ஊர்வலம் குலசேகரத்தில் இன்று மாலை 3 மணிக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டு அனுமதி கோரப்பட்டிருந்து.
இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தக்கலை டி.எஸ்.பி கணேசன் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந் நிலையில் செருப்பாலூரில் இருந்து குலசேகரம் சந்தை வழியாக காவல் ஸ்தலம், கூடத்தூக்கி தனியார் பள்ளியில் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் 1320 பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொள்வதாக இருந்த நிலையில் ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.