உள்ளூர் செய்திகள்

சோனியா வீட்டு முன் போலீஸ் குவிப்பு

Published On 2022-08-05 08:11 GMT   |   Update On 2022-08-05 08:11 GMT
  • மத்திய அரசுக்கு காங். கண்டனம்
  • தாரகை கத்பட் அறிக்கை

கன்னியாகுமரி:

காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் தாரகை கத்பர்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விசாரணை என்கின்ற போர்வையில் அலைக்களித் தார்கள். நாங்கள் அதை ஜனநாயக் கடமையுடன் எதிர்கொண்டோம். காங் கிரஸ் தலைமை அலு வலகம் ஒவ்வொரு தொண்ட னுடைய கோவில் ஆகும். கோவிலுக்குள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கு எந்த பூசாரிக்கும் அதிகாரம் இல்லை.

இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் வீட்டு முன்பு ஆயிரக்கணக்கான போலீஸ்களை குவித்து, நாட்டில் ஒரு குழப்பத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது மத்திய பாரதிய ஜனதா அரசு.

பாராளுமன்ற தேர்தலில் எப்படியாவது காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு நடந்து கொண்டிருக்கி றது. பாரதிய ஜனதா அரசு எவ்வளவுதான் அடக்கு முறையை கையாண்டாலும் காங்கிரஸ் என்றைக்குமே அடிபணியாது. என்றைக் கும் தலை நிமிர்ந்து நிற்கும். நாட்டில் உள்ள வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை திசை திருப்ப மோடி அரசு இது போன்ற செயலை செய்கிறது. ஆகவே அகில இந்திய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து தொண்டர்கள் செல்ல அனுமதிக்க வேண்டும். சோனியா காந்தியின் வீட்டிற்கு முன்பு குவித்துள்ள போலீஸ்காரர்களை உடனே வாபஸ் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News