கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை திருவிழா
- நாளை மறு நாள் நடக்கிறது
- நவராத்திரி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி நடை பெற்று வருகிறது.
திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அலங்கார தீபாராதனை, அன்னதானம் மாலையில் ஆன்மீக அருள் உரை அதைத்தொடர்ந்து பாட்டு கச்சேரி, நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டியம் போன்ற பல்வேறு நிகழ்ச்சி களும் இரவில் வாகன பவனியும் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பரிவேட்டை திருவிழா 10-ம் திருவிழா வான நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடக்கி றது.
இதையொட்டி நாளை மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் காலை 10-30மணிக்கு மேல் 10.45 மணிக்குள் கோவிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்ட பத்தில் எலுமிச்சம்பழம் மாலைகளால் அலங்க ரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்க ளுக்கு அருள்பாலிக் கும்நிகழ்ச்சி நடக்கிறது.அதன் பின்னர் மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.பகல் 1 மணிக்கு கோவிலில் இருந்து மகா தானபுரம் நோக்கி அம்ம னின் பரிவேட்டை ஊர்வ லம் தொடங்குகிறது.
இந்த ஊர்வலத்துக்கு முன்னால் நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப் பட்ட யானை செல்கிறது. அதைத் தொடர்ந்து 3 குதிரைகளில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து செல்கிறார்கள். மேலும் இந்த ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்கும் கேரளப் புகழ் தையம் ஆட்டம், பஞ்ச வாத்தியம், கயிலை வாத்தி யம், நாதஸ்வரம், பஜனை, சிங்காரிமேளம், செண்டை மேளம், பேண்ட் வாத்தியம், சிலம்பாட்டம் கோலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம் தெய்வங்களின் வேடம் அணிந்த மோகினி ஆட்டம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெறு கின்றன.
இந்த ஊர்வலத்தின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்குதிரை வாகனத் தில் அம்மன் கோவிலை விட்டு வெளியே வரும் போது போலீசார் துப்பாக்கி ஏந்தி நின்று அணிவகுப்பு மரியாதை அளிக்கின்றனர். கோவிலில் இருந்து புறப் படும் அம்மனின் பரி வேட்டை ஊர்வலம் சன்னதி தெரு, தெற்கு ரதவீதி, மேலரத வீதி, வடக்கு ரதவீதி, மெயின் ரோடு, ரெயில் நிலையசந்திப்பு, விவேகானந்தபுரம் சந்திப்பு, ஒற்றைப்புளிசந்திப்பு, பழத்தோட்டம் சந்திப்பு, பரமார்த்தலிங்கபுரம், நான்கு வழிச்சாலை ரவுண்டான சந்திப்பு வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரத்தில் உள்ள பரிவேட்டை மண்டபத்தை சென்று அடைகிறது. அங்கு பகவதி அம்மன் பாணாசுரன் என்ற அரக்கனை அம்புகள் எய்து வதம் செய்து அளிக் கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து மகாதானபுரத்தில் உள்ள நவநீத சந்தான கோபால கிருஷ்ண சுவாமி கோவி லுக்கு பகவதிஅம்மன் செல்கிறார். அங்கு பகவதி அம்மனுக்கும் நவநீத சந்தான கோபால சுவா மிக்கும் ஒரே நேரத்தில் தீபாரதனை நடக்கிறது. அதன் பிறகு அம்மனின் வாகன பவனி மகாதானபுரம் கிராமம் மற்றும் பஞ்சலிங்க புரம் பகுதிக்கு செல்கிறது. வழிநெடுகிலும் அம்மனுக்கு பக்தர்கள் எலுமிச்சம்பழம் மாலை அணிவித்து தேங்காய் பழம் படைத்து 'திருக்கணம்' சாத்தி வழிபடு கிறார்கள்.
பின்னர் அம்மன் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகுதியில் உள்ள காரியக்கார மடத்துக்கு செல்கிறார்.அங்குவைத்து அம்மன் வெள்ளிகுதிரை வாகனத்தில் இருந்து மாறி வெள்ளி பல்லக்கில் எழுந்த ருளி மீண்டும் கன்னியாகுமரி நோக்கி புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 10 மணிக்கு கன்னியாகுமரி வந்தடைந்த தும்அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பிறகு வருடத்தில் 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழி யாக பகவதி அம்மன் கோவிலுக்குள் பிரவே சிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம், கன்னியாகுமரி பகவதி அம்மன் திருக்கோ வில் நிர்வாகம், பக்தர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செய்து வருகிறது. பரி வேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்புக்காக 500-க் கும்மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பரிவேட்டை திரு விழாவையொட்டி கன்னியா குமரியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் நாகர்கோ வில், கொட்டாரம், அஞ்சு கிராமம், கன்னியா குமரி ஆகிய இடங்களில் இருந்து பரிவேட்டை திரு விழா நடக்கும் மகாதான புரத்துக்கு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படு கிறது.
கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி அகஸ் தீஸ்வரம், கொட்டா ரம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சார்பில் சுகாதார வசதிகள் மற்றும் மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பரிவேட்டை திருவிழாவை யொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நாளை மறுநாள் பகல் 12 மணி முதல் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.