உள்ளூர் செய்திகள்

ரோகிணி பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Published On 2023-08-29 13:18 IST   |   Update On 2023-08-29 13:18:00 IST
  • அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது
  • அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் :

அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமை ந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டா டப்பட்டது. ரோகிணி கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீலவிஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை தாங்கினர்.

கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.விழாவை யொட்டி அனைத்து துறை மாணவ-மாணவிகளும் புத்தாடை அணிந்து, ஊஞ்ச லாடி, இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

மேலும் அனைத்து துறை மாணவ-மாணவிகளுக்கிடையே அத்தப்பூ கோலபோட்டி நடைபெற்றது. விழாவில் கல்லூரி துணை தலைவர் பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசி ரியர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News