உள்ளூர் செய்திகள்
டெம்போவில் பெட்டிக்கடையை திருடி சென்ற மர்ம நபர்கள்
- அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார்
- பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது
கன்னியாகுமரி :
கொல்லங்கோட்டை அடுத்த மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 55). இவரது மனைவி இந்திரா மேபல் (53). இவர் மஞ்சத்தோப்பு பகுதியில் சுமார் 1 வருடமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடையை திறப்பதற்காக வழக்கம் போல் நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தார். அப்போது அவரது கடையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் அருகே உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை பார்வையிட்டார். அதில், சுமார் 12.30 மணிக்கு இந்த பெட்டிக்கடையை மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு டெம்போவில் ஏற்றி சென்றது தெரியவந்தது. இது குறித்து இந்திரா மேபல் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.