உள்ளூர் செய்திகள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
- மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அறிக்கை
- அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
நாகர்கோவில் :
குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பிற்கி ணங்க, அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எனது (தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.) தலை மையில் வருகிற 17-ந்தேதி காலை 10.30 மணிக்கு நாகர்கோவில், வடசேரியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படு கிறது.
இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பகுதி நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.