உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

சுசீந்திரம் அருகே டெம்போ மோதி தொழிலாளி பலி

Published On 2022-11-20 08:07 GMT   |   Update On 2022-11-20 08:07 GMT
  • சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை
  • பலியான கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

கன்னியாகுமரி:

சுசீந்திரம் அருகே ராம புரம் புது கிராமம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 56) கூலி தொழிலாளி. இவர் நேற்று மாலை புது கிராமம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த டெம்போ ஒன்று கனக ராஜ் மீது மோதியது‌. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரி சோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தனர். இது குறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவி க்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கனகராஜ் மகன் சுஜின் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி ஆகியோர் டெம்போ டிரைவர் பொன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பலியான கனகராஜின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து அவரது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு இருந்தனர்.

Tags:    

Similar News