உள்ளூர் செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே திருமணமான 6 மாதத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

Published On 2023-04-22 07:08 GMT   |   Update On 2023-04-22 07:08 GMT
  • எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.
  • கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

கன்னியாகுமரி :

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் கோவில்புரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தனிஷ் (வயது 24), எலக்ட்ரீசியன். இவர் தனியார் கம்பெனியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக்கோணம் பகுதியில் தனிஷ் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மின்சாரம் தாக்கியது.

இதில் தனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி தனிஷ் பரிதாபமாக இறந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. இவரது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவம் குறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிஷ் இறந்துபோன சம்பவம் தெரிந்ததும் அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News