கஜா முஜா வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை கண்டித்து குளச்சல் கட்டுமர மீனவர்கள் வேலை நிறுத்தம்
- 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
- இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது
குளச்சல் :
குளச்சலில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகு களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.விசைப்பட குகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 10 முதல் 15 நாட்கள் தங்கி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும்.
கட்டுமரம்,வள்ளங்கள் அருகில் சென்று மீன் பிடித்து விட்டு உடனே கரை திரும்பிவிடும்.இந்த மீனவ ர்கள் தூண்டிலை பயன்ப டுத்தி மீன் பிடிக்கி ன்றனர்.இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த கட்டுமங்கள் தடை செய்யப்பட்ட 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடித்து செல்வதாக குளச்சல் கட்டுமர மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த வகை வலையை பயன்படுத்துவதால் கடலில் உள்ள பவள பாறைகள் அழிந்து விடுகிறது என்றும், மீன்கள் உற்பத்தி பாதிக்க ப்படுகிறது என்றும், இதனால் கட்டுமர மீனவ ர்களின் வாழ்வ தாரம் பாதிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் இந்த 'கஜா முஜா' வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதை கண்டித்து குளச்சலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் இன்று மீன் பிடிக்க செல்லாமல் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் பாதர் தாமஸ் கொச்சேரி மீன் பிடி தொழிலாளர்கள் யூனியன் உள்பட குளச்சல் 4 சங்கங்கள் மற்றும் கொட் டில்பாடு,சைமன்காலனி ஆகிய ஊரை சேர்ந்த கட்டுமர மீனவர்களும் கலந்து கொண்டனர்.மீன் பிடிக்க செல்லாத கட்டு மரங்கள் மணற்பரப்பில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இன்று குளச்சலில் மீன் வரத்து குறைந்தது.