உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டி - மவுண்ட் லிட்ரா பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2023-10-18 07:35 GMT   |   Update On 2023-10-18 07:35 GMT
  • 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசு
  • போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம் பாராட்டினார்

நாகர்கோவில், 

மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்ட கட்டா, குமித்தே போட்டிகளில் மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியைச் சேர்ந்த மாணவி கத்தீஜா முதல் பரிசையும், மாணவி பிரித்தீ 2-ம் பரிசையும் வென்றனர். 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மாணவிகள் சங்கீஷா கராத்தே குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும், சரணிஷா குமித்தே போட்டியில் 2-ம் பரிசையும் கட்டா பிரிவில் 3-ம் பரிசையும் பெற்றனர். மாணவர்கள் பிரிவில் கட்டா, குமித்தே போட்டிகளில் மணவன் ராகவ் முதல் பரிசை வென்றார். போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் தில்லை செல்வம், இயக்குனர்கள் முகிலரசு, ஆடலரசு, முதல்வர் தீபாசெல்வி, ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், ஆனிரீனா, சேவியர், வனிதா, உடற்கல்வி ஆசிரியர்கள் முத்தரசி, ஓசான்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News