உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்ட அரசு வக்கீலாக ஜாண்சன் பதவி ஏற்பு

Published On 2022-08-22 10:05 GMT   |   Update On 2022-08-22 10:05 GMT
  • மேயர் மகேஷ் பங்கேற்பு
  • நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.

கன்னியாகுமரி:

குமரி மாவட்ட அரசு வழக்கறிஞராக ஜாண்சன் இன்று நாகர்கோவில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பதவி ஏற்றுக்கொண்டார்.

அவரிடம் முன்னாள் அரசு வழக்கறிஞர் சந்தோஷ்குமார் பொறுப்பு களை ஒப்படைத்தார். உடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், துணை மேயர் மேரிபிரின்சி லதா, முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன், குலசேகரம் பேரூராட்சி துணைத்தலைவர் ஜோஸ் எட்வர்ட்,

திற்பரப்பு பேரூர் கழக செ யலாளர் ஜாண் எபனேசர், திருவட்டார் தெற்கு ஒன்றிய பொருளாளர் ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அலாவுதின், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் ஜெஸ்டின் பால்ராஜ், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஜே.எம். ஆர். ராஜா, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வினித் ஜெரால்ட்,

ஒன்றிய துணை செயலாளர் காந்தி, பொன்மனை பேரூர் செயலாளர் சேம் பெனட் சதீஷ், திற்பரப்பு பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் யோபு, மாவட்ட பிரதிநிதி பொன். ஜேம்ஸ், ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் ஜாஹீர் உசேன், தி.மு.க. உறுப்பினர் வெண்ட லிகோடு சூர்யகுமார், மகளிர் அணியை சேர்ந்த தங்கரமணி, புனிதா, குமாரி மற்றும் பல்வேறு கட்சியினர் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News