உள்ளூர் செய்திகள்

புத்தேரி மேம்பாலத்தில் கஞ்சாவுடன் ஐ.டி. ஊழியர் உட்பட 2 பேர் கைது

Published On 2023-05-04 12:17 IST   |   Update On 2023-05-04 12:17:00 IST
  • வங்கி கணக்குகளை முடக்க போலீசார் நடவடிக்கை
  • கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம்

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல், சப்-டிவிசன்களுக்குட்பட்ட பகுதிகளில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சா வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர்களது வங்கி கணக்குகளையும் முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்பனை தொடர்பாக பொதுமக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா தலைமையிலான போலீசார் புத்தேரி பாலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர்.

அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரிடமும் சோதனை செய்தபோது 10 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சுஜித் குமார் (27), ஒழுகினசேரியை சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரன் (25) என்பது தெரியவந்தது.

சுஜித் குமார் பெங்களூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீ ராமச்சந்தி ரன் மற்றும் அவரது தாயாரின் வங்கி கணக்கும், சுஜித் குமாரின் தாயாரின் வங்கி கணக்கையும் போலீசார் முடக்க நட வடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News