குருந்தன்கோடு யூனியனில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
- கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம்,
- நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது
நாகர்கோவில் :
குருந்தன்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி யில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்த திட்டங்களான, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குறவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை யினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப் பட்டதை நேரில் பார்வை யிட்டது உள்ளிட்டவை பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சியில் காட்சிப்ப டுத்தப்பட்டது.
மேலும், முதல்-அமைச்ச ரை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஸ்ரீதர் நேரில் சந்தித்தது, மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட் டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கி யது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்திமக்கள் தொடர்பு துறையின் சார்பாக அமைக் கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியினை பொது மக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங் கள் குறித்து தெரிந்து கொண்டு பயன் பெற்றனர்.