உள்ளூர் செய்திகள்

குமரியில் குளுகுளு சீசன்

Published On 2023-07-26 12:06 IST   |   Update On 2023-07-26 12:06:00 IST
  • குழித்துறையில் 12.4 மில்லி மீட்டர் மழை
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது.

நாகர்கோவில் :

குமரியில் கடந்த 3 நாட்க ளாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. குழித்துறை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டியது.

அங்கு அதிகபட்சமாக 12.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பூதப்பாண்டி, கன்னிமார், நாகர்கோவில், சுருளோடு, இரணியல், ஆரல்வாய்மொழி பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

அருவியில் மித மான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும் மழை பெய்து வருவதையடுத்து அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணைகளில் இருந்து பாசனத்திற்காக 934 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் தோவாளை சானல், அனந்தனார் சானல், நாஞ்சில்நாடு,புத்தனார் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்துவிடப்பட்டுள்ளது.

பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 31.25 அடியாக உள்ளது. அணைக்கு 452 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 684 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 22.30 அடியாக உள்ளது. அணைக்கு 248 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 250 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News