உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

Published On 2023-09-21 06:31 GMT   |   Update On 2023-09-21 06:31 GMT
  • 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
  • ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

நாகர்கோவில் :

நாமக்கல் மாவட்டம் சந்தைப்பேட்டை புதூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் சவர்மா சாப்பிட்டு பலியானார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரி கள் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.

தமிழகம் முழுவதும் ஓட்டலில் சோதனை நடந்து வருகிறது. குமரி மாவட்டத் தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் குமார் தலைமையில் மாநகர அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கரநாரா யணன் மற்றும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை ஆகி யோர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

நாகர்கோவில் கோர்ட் ரோடு, கேப் ரோடு, ஆசாரிபள்ளம், பார்வதி புரம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டது. 17 ஓட்டல்களில் நடத்தப்பட்ட சோத னையில் 6 ஓட்டல்களில் ரசாயன பொடி கலந்து கோழி இறைச்சி, கெட்டுப்போன இறைச்சி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை யடுத்து அங்கிருந்த 25 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 6 ஓட்டல்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஓட்டல் களிலும் உணவு பாது காப்பு துறை அதிகாரி களும், சுகாதாரத்து றையினரும் இன்று 2-வது நாளாக சோதனை மேற் கொண்டு வருகிறார்கள். உணவு களை பாது காப்பாக வைக்க வேண்டும். தேவையில்லாத ரசாயன பொடிகளை பயன்ப டுத்தக்கூடாது. கெட்டுப்போன உண வுகளை பயன்படுத்தக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Tags:    

Similar News