உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரியில் கழிவறையில் தவறி விழுந்து மீனவர் சாவு

Published On 2023-11-06 07:12 GMT   |   Update On 2023-11-06 07:12 GMT
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்
  • மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரி அஞ்சு கூட்டுவிளை பெரியார்நகர் பகுதியை சேர்ந்தவர் சில்வஸ்டர் (வயது 70), மீனவர். இவருக்கு மனைவியும், 5 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவர் கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு அவர் கால் வழுக்கி தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

உடனே அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச் சைக்காக கொட்டாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று சில்வஸ்டர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கன்னியாகுமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரது உடல் அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News