உள்ளூர் செய்திகள்

கடலுக்கு சென்ற முதல் நாளே ரூ.2 கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின

Published On 2023-06-20 07:45 GMT   |   Update On 2023-06-20 07:45 GMT
  • சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி
  • 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது

கன்னியாகுமரி :

மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதி நள்ளிர வுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமானார்கள்.

ஆனால் வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின் காரணமாக விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கசெல்ல மீன்வளத்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து விசைப்படகுமீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சில அனுமதி கேட்டு கடந்த 4 நாட்களாக சின்னமுட்டத் தில் உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் முற்றுகை யிட்டு வலியுறுத்தி வந்தனர். ஆனால் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அவர்களுக்கு மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்க வில்லை.

இருப்பினும் சின்ன முட்டம் விசைப்படகு மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை மீறி மீன் பிடிக்க செல்ல முடிவு செய்தனர்.அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

முதல் நாளான நேற்று ஒரே நாளில் 295 விசைப் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இந்த விசைப்ப டகுகள் இரவு 9 மணி முதல் கடலில் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினார்கள்.

தடை காலம் முடிந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்பிய விசை படகுகளில் சீலா, வஞ்சிரம் நெய்மீன், பாறை, விளமீன், கைக்கொ ழுவை, நெடுவா, முட்டி, கணவாய், நவரை, அயிலை போன்ற உயர் ரக மீன்கள் கிடைத்தன. மீனவர்கள் பிடித்துக் கொண்டு வந்த உயர் ரக மீன்களை போட்டி போட்டு ஏலம் எடுப்பதற்காக வெளியூர், வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான மீன் வியாபாரிகள் வந்து குவிந்திருந்தனர்.

இதனால் 2 மாதங்களுக்கு பிறகு சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் நேற்று முதல் களைகட்ட தொடங்கி விட்டது. தடை நீங்கி கடலுக்கு சென்றமுதல் நாளே ரூ.2கோடி மதிப்புள்ள மீன்கள் சிக்கின. இதனால் சின்னமுட்டம் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News