உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம் 

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-10-31 12:13 GMT   |   Update On 2022-10-31 12:13 GMT
  • 4 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்
  • கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாகர்கோவில்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். செல்ல நாடார், ஹரி குமார், ஆறுமுகம்பிள்ளை, வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

4 வழிச் சாலைக்கு கையகப்படுத்திய நிலத்தின் உரிமையாளர்களுக்கு முழு இழப்பீட்டுத் தொகை வழங்க மத்திய அரசும் நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.

துணை செயலாளர் விஜி, பொருளாளர் சின்னத்தம்பி. செண்பக சேகரன் பிள்ளை, சுனில்குமார், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விவசாய சங்கத்தினர், கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துச் சென்றனர்.

Tags:    

Similar News